இந்நிலையில் இந்த தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்பு ரீதியிலான ஒரு ஆட்டத்தில் பங்கேற்க எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் உர்குன் திரும்பிய பிறகு அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரி ழந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது.

