Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!
    உலகம்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!

    adminBy adminSeptember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெக்சாஸ்: செப்டம்பர் 10 ஆம் தேதி டல்லாஸ் மோட்டலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா எனும் நபர், வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    டெக்சாஸின் டெனிசன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் இன்டர்ஸ்டேட் 30 இல் அமைந்துள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டல்லாஸ் காவல்துறையினர் யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் என்பவரை கைது செய்தனர். அவர் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின்படி, நாகமல்லையா, மோட்டல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​கோபோஸ்-மார்டினெஸ் மற்றும் அவருடன் வந்த பெண் சக ஊழியரை அணுகினார். ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாகமல்லையா அவர்களிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமடைந்த கோபோஸ்-மார்டினெஸ் மோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் நாகமல்லையா துரத்தி சென்று கத்தியால் குத்தினார். நாகமல்லையாவின் மனைவியும் மகனும் வெளியே ஓடி வந்து தடுக்க முயன்றபோதும், அவர்களை தள்ளிவிட்டு கடுமையாக தாக்கினார். இதன்பின்னர் அவரின் தலையை துண்டித்து, உதைத்து தள்ளி குப்பைத் தொட்டியில் வீசினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

    காவல்துறையினரின் தகவல்களின்படி, நாகமல்லையாவைக் கொல்ல கோபோஸ்-மார்டினெஸ் கத்தியைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,‘டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தனது பணியிடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகமல்லையாவின் துயர மரணத்திற்கு ஹூஸ்டன் இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் டல்லாஸ் காவல்துறையின் காவலில் உள்ளார். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: காரணம் என்ன?

    September 12, 2025
    உலகம்

    இந்திய மூல மனிதர் நம்மில் தலை துண்டிக்கப்பட்டார்: ஒரு சலவை இயந்திரம் எப்படி கொடூரமான கொலை செய்ய வழிவகுத்தது; கொலையாளி துண்டிக்கப்பட்ட தலையை உதைப்பதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!

    September 12, 2025
    உலகம்

    பைஜு பட் சந்திக்கவும்: இந்திய-அமெரிக்க குடியேறியவர் இப்போது இளைய அமெரிக்க பில்லியனர்களிடையே நிகர மதிப்புள்ள… | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்

    September 12, 2025
    உலகம்

    டல்லாஸ்: இந்திய-மூல மனிதர் மனைவி & மகன் முன் மோட்டலை நோக்கி தலை துண்டிக்கப்பட்டார்; சந்தேக நபர் மச்சீட்டுடன் கைது செய்யப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் திமுக தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறது: தமிழிசை விமர்சனம்
    • ஹம்மிங் பறவைகளை ஈர்க்க 6 சிறந்த பூக்கள்: உங்கள் தோட்டத்திற்கு தேன் நிறைந்த தாவரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
    • தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
    • சியா, ஆளி, எள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? AIIMS பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.