Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
    உலகம்

    அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது; காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. இதனால் கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன.

    டெக்சாஸில் வெள்ளப் பாதிப்பு காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறினார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், சவாலான நிலப்பரப்பு, ஆறுகளில் அதிகரிக்கும் வெள்ள்ப்பெருக்கு மற்றும் நீர்நிலைகளில் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் சவால்களுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். ஹெலி​காப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலமாகவும் காணா​மல்​ போனவர்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

    கெர் கவுண்டியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயினர். மீட்புப்பணியின் போது கெர் கவுண்டியில் உள்ள இந்த முகாமில் இருந்து 28 மாணவிகள் உட்பட 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டிராவிஸ், பர்னெட், கெண்டல், டாம் கிரீன் மற்றும் வில்லியம்சன் மாவட்டங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் கர்னல் ஃப்ரீமேன் மார்ட்டின் தெரிவித்தார்.

    அடுத்த சில நாட்​களுக்கு டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதனால் நதி கரையோரம் வசிக்​கும் மக்கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

    இந்த நிலையில், கெர் கவுண்டியில் பேரிடர் அவசரநிலை மேலாண்மை தொடர்பான கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனையடுத்து டெக்சாஸில் மத்திய அவசரநிலை மேலாண்மை அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் மாகாண பகுதிகளை வரும் வெள்ளிக்கிழமையன்று ட்ரம்ப் பார்வையிடவுள்ளார். அவர் இந்த திடீர் பெருவெள்ளம் குறித்து பேசுகையில், “டெக்சாஸ் மாகாண அரசு மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது ஒரு பயங்கரமான சம்பவம், முற்றிலும் கொடூரமானது” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    த்ரிஷா சாட்டர்ஜி யார்? கிளையன்ட் நெருக்கடியின் போது ஐ.சி.இ தனது டகோ பெல் எண்ணைக் கொடுத்ததாகக் கூறிய இந்திய மூல குடியேற்ற வழக்கறிஞர் – வீடியோவைப் பாருங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 2, 2025
    உலகம்

    டெல்டா காக்பிட் ரெய்டு: சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முகங்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மூல பைலட் 24 மோசமான எண்ணிக்கைகள்; ஜாமீன் 15 மில்லியன் டாலர் – டைம்ஸ் ஆப் இந்தியா

    August 2, 2025
    உலகம்

    இந்திய -ஆரிஜின் நிகில் ரவிஷங்கர் விமான முதலாளியாகிறார், நியூசிலாந்து ஊடகங்கள் சமூக ஊடகங்களில் பாரிய ட்ரோலிங்கிற்கான கருத்துக்களை முடக்குகின்றன – டைம்ஸ் ஆப் இந்தியா

    August 2, 2025
    உலகம்

    ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப்

    August 2, 2025
    உலகம்

    இந்தியாவுக்கான 25% வரிவிதிப்பு ஆக.7 அமல்: பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு

    August 2, 2025
    உலகம்

    ரஷ்ய உறவு பாதிக்கப்படாது: இந்தியா திட்டவட்டம்

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குழந்தைப் பாடகர் முதல் தேசிய விருது இசையமைப்பாளர் வரை – யார் இந்த ஜி.வி.பிரகாஷ்?
    • ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு உயர் நீதிமன்றம் தடை
    • ஆண்களில் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்
    • பாகிஸ்தான் பயங்கராத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி
    • கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் அசாத்திய கலைஞன் – யார் இந்த எம்.எஸ்.பாஸ்கர்? 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.