Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘அந்தத் தருணம்…’ – போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு
    உலகம்

    ‘அந்தத் தருணம்…’ – போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அந்தத் தருணம்…’ – போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: போப் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல் ஏஞ்சலோ கோமாஸ்ட்ரி தலைமையில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவின் முடிவில், போப் பிரான்சிஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் பல கொள்கைகளை போப் மற்றும் வாடிகன் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் அவரது திட்டங்களும் அடங்கும். இதனிடையே, இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.

    நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று போப், வான்ஸுக்கு ஜெபமாலைகள், மூன்று பெரிய சாக்லேட் மற்றும் ஈஸ்டர் முட்டைகளின் தொகுப்பை அவரது குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இந்த மாத தொடக்கத்தில், சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் வாடிகனுக்கு முறையான அரசு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். ஆனால், போப் பிரான்சின் உடல் நலன் கருதி, யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படாததால், அவர்களின் திட்டங்களை ஒத்திவைத்தனர். போப் இந்த அரச தம்பதியினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களின் 20-வது திருமண ஆண்டு விழாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

    சார்லஸ் மன்னராவதற்கு முன்பு, போப் பிரான்சிஸும், சார்லஸும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சந்தித்துள்ளனர். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2014 இல் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்

    September 5, 2025
    உலகம்

    டொனால்ட் டிரம்பின் உயர்-ஐ.க்யூ குழு: டிரம்பின் வெள்ளை மாளிகை இரவு உணவில் எத்தனை இந்திய வம்சாவளி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தன-பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 5, 2025
    உலகம்

    ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

    September 5, 2025
    உலகம்

    ஜிம் மேக்ஸ்வீன் யார்? கனடாவின் யார்க் காவல்துறைத் தலைவர் கூறுகையில், ‘வீட்டு படையெடுப்பின் போது மறைத்து இணங்குவதே சிறந்த பாதுகாப்பு’ | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 5, 2025
    உலகம்

    இந்தியா உடனான நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்: ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்

    September 5, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செங்கோட்டையன் குறித்த பேச்சை தவிர்த்த பழனிசாமி: கம்பம் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?
    • ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
    • ‘தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு நான்…’ – ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின் உரை
    • பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழச் செய்வதுதான் சமூக நீதியா? – தலைவர்கள் கண்டனம்
    • “கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.