Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘அது நான்தான்’ – 18-வது முறையாக இந்தியா – பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்!
    உலகம்

    ‘அது நான்தான்’ – 18-வது முறையாக இந்தியா – பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்!

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அது நான்தான்’ – 18-வது முறையாக இந்தியா – பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹேக்: “நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது தானே என்று ட்ரம்ப் கூறுவது இது 18-வது முறையாகும்.

    இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டதில் இருந்தே, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனால் அதன் பின்னரும் கூட இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்.

    பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என நம்புகிறேன். போரை நிறுத்தியது நான்தான்” என ட்ரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது, ஹேக் நகரில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம். அவர்கள் இருவருடனும் நான் தொலைபேசியில் பலமுறை பேசினேன். வர்த்தக உறவுகள் பற்றி உறுதியளித்தேன். அதன் மூலம் மோசமாகிக் கொண்டிருந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்றேன்.” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் பிற இந்திய அமெரிக்க தலைவர்கள் பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு துப்பாக்கி பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 16, 2025
    உலகம்

    புளோரிடா மருத்துவர் மர்மமான சூழ்நிலையில் டாலர் மர உறைவிப்பாளரில் இறந்து கிடந்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 16, 2025
    உலகம்

    ஜான் லெனானைக் காப்பாற்ற முயன்ற அறுவை சிகிச்சை நிபுணர் அவர் இறப்பதற்கு முன் சிலிர்க்கும் தருணங்களை விவரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 16, 2025
    உலகம்

    ‘கனடாவில் இறக்கப் போகிறேன்’: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்மீத் சிங் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 15, 2025
    உலகம்

    ஜோகோவிச் நாடு கடத்தப்பட்டார், பயங்கரவாதி வரவேற்கப்பட்டார்: டிரம்ப் ஜூனியர், போண்டி பீச் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆஸ்திரேலியாவைத் தாக்கினார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 15, 2025
    உலகம்

    அமெரிக்க அணுசக்தி இலக்குகள் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, ரஷ்யா 23 இங்கிலாந்து பாதுகாப்பு இலக்குகளை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 41 வயதில் சௌமியா டாண்டன்: எப்படி எளிமையான உணவுப் பழக்கம், உணவுக் கட்டுப்பாடு அல்ல, அவளைப் பொருத்தமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் பிற இந்திய அமெரிக்க தலைவர்கள் பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு துப்பாக்கி பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரிசி தவிடு மற்றும் சூரியகாந்தி எண்ணெய்: இதயம், கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மூளை டீஸர்: ஒரு சூப்பர் ஜீனியஸால் மட்டுமே இந்த வைரஸ் புதிரை நொடிகளில் தீர்க்க முடியும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளோரிடா மருத்துவர் மர்மமான சூழ்நிலையில் டாலர் மர உறைவிப்பாளரில் இறந்து கிடந்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.