Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?
    உலகம்

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

    ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார்.

    அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்றால் என்ன? – அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான உலகளாவிய ஆயுதக் குறைப்பு இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர ஐந்து உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அணு ஆயுத நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற நாடுகள் தங்கள் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970-இல் நடைமுறைக்கு வந்தது, 1995-இல் இது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

    ஐ.நா. தரவுகளின்படி, மொத்தம் 191 நாடுகள் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஈரான் 1970-இல் அதன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் அணு ஆயுதங்களைக் கைவிட்டு, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைத்த பிறகு சிவில் அணுசக்தியைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.

    அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய 2018-ஆம் ஆண்டு முதல் ஈரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது. அப்போது முதலே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகவும், ஐஏஇஏ உடன் ஒத்துழையாமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஈரான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளோ ஈரான் அணுகுண்டை உருவாக்க நெருங்கிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தாகக் கூறி, அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

    இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே இன்று 4-வது நாளாக போர் நீடித்​துள்ளது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி​ வருகிறது. அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற திட்டமிட்டு இருப்பது, அணு ஆயுதப் போருக்கு வித்திடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உடற்பயிற்சியை விரும்புவதற்கு உங்கள் மூளைக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? விஞ்ஞானிகளுக்கு பதில் உள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்
    • “ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு
    • விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
    • பிரமிடுகளை விட வயதான இந்தியாவில் பண்டைய தளங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.