Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, March 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?
    உலகம்

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

    ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார்.

    அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்றால் என்ன? – அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான உலகளாவிய ஆயுதக் குறைப்பு இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர ஐந்து உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அணு ஆயுத நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற நாடுகள் தங்கள் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970-இல் நடைமுறைக்கு வந்தது, 1995-இல் இது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

    ஐ.நா. தரவுகளின்படி, மொத்தம் 191 நாடுகள் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஈரான் 1970-இல் அதன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் அணு ஆயுதங்களைக் கைவிட்டு, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைத்த பிறகு சிவில் அணுசக்தியைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.

    அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய 2018-ஆம் ஆண்டு முதல் ஈரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது. அப்போது முதலே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகவும், ஐஏஇஏ உடன் ஒத்துழையாமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஈரான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளோ ஈரான் அணுகுண்டை உருவாக்க நெருங்கிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தாகக் கூறி, அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

    இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே இன்று 4-வது நாளாக போர் நீடித்​துள்ளது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி​ வருகிறது. அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற திட்டமிட்டு இருப்பது, அணு ஆயுதப் போருக்கு வித்திடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    273 பேரைக் கொன்ற விமானம் 191 இன் கொடிய விபத்தைக் காட்டும் பத்து இரவுகள் குளிர்ச்சியான தரிசனங்களை மனிதன் கண்டான் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    ஜோஹ்ரான் மம்தானியின் மாளிகைக்கு வெளியே நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் IED கள் வீசப்பட்ட பின்னர் 2 பென்சில்வேனியா பதின்ம வயதினரின் வீடுகளை FBI சோதனை செய்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘அவர் அவர்களை நேசித்தார்’: ஜார்ஜியா ஆசிரியரின் மனைவி, குறும்புத்தனத்தில் டிரக் மூலம் தாக்கப்பட்டார், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘H1B விசாக்கள் காரணமாக’: Forsyth கவுண்டியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஆதிக்கம் செலுத்தும் 35,000 இந்திய-அமெரிக்கர்கள் மீது MAGA கோபமடைந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    LLM கேள்விகளுக்குப் பிறகு தற்கொலை: கேட்டி மில்லர் ‘அன்பானவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்கிறார், எலோன் மஸ்க் ஒரு வார்த்தை பதிலைச் சேர்த்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோடைக்கால முடி பராமரிப்பு: கோடை வெப்பத்திலிருந்து உங்கள் தலைமுடியைக் காப்பாற்ற 5 சமையலறை ரகசியங்கள்
    • கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிவம் துபேயின் சொகுசு மும்பை இல்லத்தின் உள்ளே: கிரிக்கெட் வீரரின் ஸ்டைலான இல்லத்தில் ஒரு பார்வை
    • ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசனின் மனதைக் கவரும் காதல் கதை: அந்நியர் முதல் வாழ்க்கைத் துணை வரை
    • கத்தார், பஹ்ரைன், குவைத் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது. துபாய் மற்றும் ரியாத் விமான நிலையங்கள் வரையறுக்கப்பட்ட சேவைகளை இயக்குகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.