Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
    உலகம்

    அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

    அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (ராணுவ தளபதிகள்) மிகப்பெரிய வீரர்களை போன்று பேசினர். அவர்கள் இன்று உயிரோடு இல்லை.

    ஈரான் ராஜ்ஜியம் நிலைத்திருக்க வேண்டும். இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. எனினும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம். இதுதொடர்பாக அமெரிக்காவின் மூத்த தளபதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.

    60 நாட்களுக்குள் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நாடு கையெழுத்திடவில்லை. இன்று 61-வது நாள். ஈரானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொண்டால் நல்லது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஈரான் வட்டாரங்கள் கூறும்போது, “அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே ஞாயிற்றுக்கிழமை 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் ஈரான் பங்கேற்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறும்போது, “இஸ்ரேலும் ஈரானும் பொறுமை, நிதானத்துடன் செயல்பட வேண்டும். மத்திய கிழக்கின் அமைதியை காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

    சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறும்போது, “ஈரான் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்ரேல், ஈரான் இடையே பதற்றத்தை தணிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். சமரச தூதராக செயல்பட சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    September 16, 2025
    உலகம்

    இந்தியன் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டது: காங்கிரஸ்காரர் ரோ கன்னா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தெருக்களில் ‘சுதந்திரமாக இருக்கக்கூடாது’ என்று கூறுகிறார்; அவரது குற்றவியல் கடந்த காலத்தை மேற்கோள் காட்டுகிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    ‘நீங்கள் சட்டவிரோதமாக வந்தால் …’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் தலை துண்டிக்கப்பட்ட பிறகு அமெரிக்க டி.எச்.எஸ். பிடன் நிர்வாகி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    சார்லி கிர்க் ஷூட்டிங்: கரேன் அட்டியா யார்? சார்லி கிர்க்கின் படுகொலை குறித்த கருத்துகளுக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் நீக்கப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

    September 15, 2025
    உலகம்

    வத்திக்கான் சிட்டி திகைப்புகள்: எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பலின் 3,000 ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மீது தலைசிறந்த சின்னங்களுடன் வானத்தை ஒளிரச் செய்கின்றன | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொசுக்கள் மற்றும் ஈக்களைத் தக்கவைக்க சூழல் நட்பு வழிகள்: இயற்கை விரட்டிகள், தாவரங்கள் மற்றும் அலங்கார உதவிக்குறிப்புகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கூட்டாட்சிக்கு எதிராக இந்தியை திணிக்கும் முயற்சி: அமித் ஷாவுக்கு தவெக கண்டனம்
    • டம்பிள் ட்ரையர், ரேடியேட்டர்கள் அல்லது டிஹைமிடிஃபையர் இல்லாமல் வீட்டிற்குள் வேகமாக துணிகளை எப்படி உலர்த்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!
    • “பாமக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” – உதயநிதி விருப்பம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.