Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அடுத்த வாரம் ட்ரம்ப் – புதின் சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி
    உலகம்

    அடுத்த வாரம் ட்ரம்ப் – புதின் சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அடுத்த வாரம் ட்ரம்ப் – புதின் சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடுத்த வாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அந்த பிரதேசத்தில் மூன்றரை ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நிறைய ரஷ்யர்கள் உயிரிழந்துவிட்டனர். நிறைய உக்ரேனியர்களும் உயிரிழந்துவிட்டனர். இந்த பிரச்சினை மிகவும் சிக்கலானது. நாங்கள் சிலவற்றை திரும்பப் பெறப் போகிறோம். சிலவற்றை மாற்றப் போகிறோம். இருவரின் நன்மைக்காகவும் சில பிரதேசங்களை மாற்றுவோம்.

    அமைதியைக் காண ஐரோப்பிய தலைவர்கள் விரும்புகிறார்கள், அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். அதிபர் ஜெலன்ஸ்கி இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட தயாராக இருப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, “ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டுக்க எதிராக கூடுதல் தடைகள் விதிக்கப்படும். அதை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருக்க வேண்டும்” என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதேவேளையல், போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் தனது பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் கூறி இருந்தார். இந்த பின்னணியில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ரஷ்ய செய்தித் தொடர்பாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார். ரஷ்யாவுக்கு அருகில் இருப்பதால் அலாஸ்கா பொருத்தமான இடம் என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மற்றும் ரஷ்யா கைப்பற்றியுள்ள டான்பாஸ் ஆகிய பகுதிகள் ரஷ்யா வசம் இருக்கும் என்றும், ரஷ்யா ஓரளவு கைப்பற்றியுள்ள கெர்சன், சபோரிஷியா பகுதிகளை அது உக்ரைனக்கு விட்டுக்கொடுக்கும் என்றும், இதற்கேற்ப ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில், உக்ரைனின் 20% நிலப்பரப்பை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    “நேட்டோவில் இணைவது என்ற தனது விருப்பத்தை உக்ரைன் கைவிட வேண்டும், அது பொதுவான நாடாக இருக்க வேண்டும், அது தனது ராணுவ பலத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் விலக்கப்பட வேண்டும், ரஷ்யாவின் தென்கிழக்கில் அது ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும்” உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 3 முறை நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் நிபந்தனைகள், சரணாகதி அடைவதற்கு ஈடானது என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் கருதுகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் மீதான முழு அளவிலான போரை ரஷ்யா தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை முதன்முறையாக சந்தித்துப் பேச உள்ளார். கடந்த பிப்ரவரியில் ட்ரம்ப்பும், புடினும் தொலைபேசியில் பேசிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘இது மனம் உடைந்தது’: இங்கிலாந்தில் உள்ள இந்திய மூல உணவக உரிமையாளர் காழ்ப்புணர்ச்சிக்குப் பிறகு துப்பறியும் நபராக மாறுகிறார், போலீசார் அவரிடம் ‘சான்றுகள்’ என்று சொன்னார்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா

    August 9, 2025
    உலகம்

    காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை

    August 9, 2025
    உலகம்

    இந்தியாவுடன் பேச்சு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

    August 9, 2025
    உலகம்

    காசாவை கைப்பற்றும் முடிவுக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் – அடுத்து என்ன?

    August 8, 2025
    உலகம்

    ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: கம்போடிய பிரதமர் கோரிக்கை

    August 8, 2025
    உலகம்

    “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நகரங்களில் உட்புற மாசுபாட்டிற்கான அமைதியான காரணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இது மனம் உடைந்தது’: இங்கிலாந்தில் உள்ள இந்திய மூல உணவக உரிமையாளர் காழ்ப்புணர்ச்சிக்குப் பிறகு துப்பறியும் நபராக மாறுகிறார், போலீசார் அவரிடம் ‘சான்றுகள்’ என்று சொன்னார்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா
    • அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    • காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச்செயலாளர் கவலை
    • திமுக இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா: மாநில அளவில் முக்கிய பொறுப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.