சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்னை, தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்று) இங்கு வருகை புரிந்துள்ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர்.
ஸ்ரீ சாரதா நவராத்திர் மஹோற்சவத்தை முன்னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப். 22-ம் தேதி காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, குரு வந்தனம், கணபதி பூஜை, பிரதான – விசேஷ சங்கல்பம், பூர்வாங்கம், புண்ணியாகவாசனம், கலச பிரதிஷ்டை நடைபெறும். செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை காலை 8.30 மணிக்கு தினசரி பூஜை, சங்கல்பம், சப்தசதி பாராயணம் (2 முறை), ஹோமம் (1 முறை), மகா தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராய ணம், மூல மந்திர ஜெபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மகா தீபாராதனை, மந்திர புஷ்பம் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் திருவிளக்கு பூஜை, அஸ்வ பூஜை, ஸ்ரீவித்யா கணபதி ஹோமம், துர்கா சுக்தஹோமம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம்,கன்யா பூஜை உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களை 8122853541, 9840021526, 9940369680, 7358877666, 9841446897, 9444911893 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம். உன்னத எண்ணங்களையும் நல்ல லட்சியங்களையும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினரை மாற்றும் நோக்கத்துடன், ஆன்மிக, கலாச்சார கல்வியுடன் நவீன கல்வியை வழங்வதற்காக, தாம்பரம் (கிழக்கு), ராஜகீழ்ப்பாக்கத்தில் காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளி2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.