Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
    ஆன்மீகம்

    வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    adminBy adminJune 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக விழா இன்று (ஜூன் 9) நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் தொடங்கினர். பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு சண்முக வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் வரையிலும் பக்தர்கள் சுமந்து வந்த பாலில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவடிகள் எடுத்தும், பறவைக் காவடி, அழகு குத்தியும் பல்வேறு வகையில் தங்களது நேத்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

    மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அரோகரா கோஷங்களுடன் முருகனை தரிசித்தனர். 16 கால் மண்டபம் அருகே ஏராளமான பக்தர்கள் பால் குடத்துடன் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொலைவிலிருந்து பால்குடம் எடுத்து நடந்து வரும் பக்தர்களுக்காக கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க, தண்ணீர் இறைப்பான் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், 16வது மண்டபம் முதல் சன்னதி வரை தேங்காய் நார் போடப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பூக்குழி இறங்குமிடத்தில் அருகே தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

    August 15, 2025
    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்

    August 14, 2025
    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜெஃப் பெசோஸின் தாய் மரண செய்தி: ஜெஃப் பெசோஸின் தாய் ஜாக்லின் கிஸ் பெசோஸ் லூயி பாடி டிமென்ஷியாவுடன் சண்டையிட்ட பிறகு 78 மணிக்கு இறந்தார்: இங்கே அது என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
    • மேட்டூருக்கு நீர்வரத்து 9,263 கனஅடியாக சரிவு
    • கிரக எச்சரிக்கை! ஏதோ ‘பெரிய’ பூமிக்குள் நகர்கிறது; விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்தவர்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின கோலாகலம்: 12-வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.