
சென்னை: நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர இக்கால அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.
பாரம்பரிய குருகுல முறையின்கீழ் 16 தேர்வுகளை உள்ளடக்கிய ஆறு ஆண்டு கால பாடத்திட்டமாக, தெனாலி சாஸ்திர பரீட்சை உள்ளது. இந்த சாஸ்திர பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 12 சாஸ்திர அறிஞர்களை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டி, ஆசி வழங்கினர்.

