Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மன்னார்குடி: முதன்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த நிகழ்ச்சி
    ஆன்மீகம்

    மன்னார்குடி: முதன்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த நிகழ்ச்சி

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மன்னார்குடி: முதன்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த நிகழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் முதல்முறையாக கருட வாகனத்தில் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அருள்பாலித்த ஆன்மிக நிகழ்ச்சி இன்று (ஜூன் 11) நடத்தப்பட்டது.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று ராஜகோபாலசாமி, கோபிநாத சுவாமி ஆகிய பெருமாள்கள், கைலாசநாதர் கோயில் சன்னதி அருகே சூரிய உதயத்தின் போது சங்கமித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல், அருகில் உள்ள பெருமாள் கோயில்களில் இருந்தும் கருட வாகனத்தில் பெருமாள் வரவழைக்கப்பட்டு, அருள் பாலிக்கச் செய்ய மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் மற்றும் அறங்காவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய உதயத்தின்போது, மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோபிநாத சுவாமி, சேரன்குளம் வெங்கடாஜலபதி சுவாமி, நவநீதகிருஷ்ணன் சுவாமி, சாத்தனூர் பிரசன்ன வேங்கடரமண சுவாமி, ஏத்தக்குடி ராஜகோபால சுவாமி, திருமக்கோட்டை ரங்கநாத பெருமாள், இருள்நீக்கி லட்சுமி நாராயண பெருமாள் காலாச்சேரி ஸ்ரீனிவாச பெருமாள், பூவனூர் கோதண்ட ராமர், கீழப்பனையூர் கஸ்தூரி ரங்க பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, மன்னார்குடி கைலாசநாதர் கோயில் அருகே அணிவகுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பெருமாள்களுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் திருவாதிரை தினத்தன்று ராஜகோபால சுவாமி கோயில் முன்னிலையில், மன்னார்குடியில் உள்ள சிவாலயங்களில் இருந்து நடராஜர் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அதன் பின் தொடர்ச்சியாக இந்த ஆண்டிலிருந்து கைலாசநாதர் கோயில் முன்பு பெருமாள்கள் சங்கமித்து கருட வாகனத்தில் அருள்பாளிக்கும் இத்தகைய உதயகருட சேவை நிகழ்ச்சி நிகழாண்டிலிருந்து தொடங்கியிருப்பது சைவ,வைணவத்தின் ஒற்றுமை மற்றும் பெருமையை வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துச்செல்லுமென ஆன்மிகப் பெரியோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

    August 15, 2025
    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்

    August 14, 2025
    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜெஃப் பெசோஸின் தாய் மரண செய்தி: ஜெஃப் பெசோஸின் தாய் ஜாக்லின் கிஸ் பெசோஸ் லூயி பாடி டிமென்ஷியாவுடன் சண்டையிட்ட பிறகு 78 மணிக்கு இறந்தார்: இங்கே அது என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
    • மேட்டூருக்கு நீர்வரத்து 9,263 கனஅடியாக சரிவு
    • கிரக எச்சரிக்கை! ஏதோ ‘பெரிய’ பூமிக்குள் நகர்கிறது; விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்தவர்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின கோலாகலம்: 12-வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.