Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
    ஆன்மீகம்

    பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் ”பண்ணாரி” எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடும், நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாக ( ஏப்ரல் 8. ஆம் தேதி) இன்று அதிகாலை 3 மணிக்கு, குண்டம் பூ இறங்குதல் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40 நாள்கள் தீவிரமான விரதம் இருந்து, துளசி மாலை, மஞ்சள் ஆடை அணிந்து, மாலையில் தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். இன்று அதிகாலை நான்கு மணி முதல் கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி குண்டத்தில் இறங்குவதற்காக, 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர்.

    இதில் அதிகாலை 4 மணிக்கு காப்புகட்டு பூசாரிகள் கைக்குண்டம் இறங்கினர். இதையடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கிலான பக்தர்கள் கைகளில் வேப்பிலையுடன், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் கையில் குழந்தையை ஏந்தி வந்து குண்டம் இறங்கினர்.

    இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்று, காலை 10 மணிக்கு குண்டம் மூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்யவும், தடுப்பு அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டுள்ளது.

    கோயில் வளாகத்தில், பந்தல் அமைத்து குடிநீர் வசதி, மருத்துவ வசதி, 30 இடங்களில் மொபைல் டாய்லெட் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தைச்சுற்றி 70 இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸாரின் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 700 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 6, 2025
    ஆன்மீகம்

    பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத ஏற்பாடு தீவிரம்

    August 6, 2025
    ஆன்மீகம்

    அம்பகரத்தூர் பத்ர காளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 5, 2025
    ஆன்மீகம்

    மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

    August 5, 2025
    ஆன்மீகம்

    சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்

    August 5, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் சாமி தரிசனம்

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம்
    • கீமோதெரபி வெர்சஸ் நோயெதிர்ப்பு சிகிச்சை: செயல்திறன், பக்க விளைவுகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை விளைவுகளை ஒப்பிடுதல் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: கூடுதலாக 25% விதித்த ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?
    • 45+ வயது பெண் போலீஸாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை காவல் ஆணையர் உத்தரவு
    • படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு தொப்புள் மீது தூய நெய் பயன்படுத்துவதன் நன்மைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.