Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி – நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!
    ஆன்மீகம்

    புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி – நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி – நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம் செய்தார்.

    புதுவை வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் கடற்கரைகளில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரியையொட்டி புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டது. இன்று வைத்திக்குப்பம் கடற்கரையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், கவுசிக பாலசுப்பிரமணியர், காளத்தீஸ்வரர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர் உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

    ஒரே இடத்தில் அனைத்து கோயில்களின் சுவாமிகளையும் தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல், பக்தர்ளுக்காக குடிநீர், நடமாடும் கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவையும் செய்யப்பட்டிருந்தத. காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது.

    சுவாமிகளை தரிசனம் செய்ததுடன் பலரும் முன்னோருக்கு திதியும் தந்தனர். கடற்கரையில் உள்ளூர் மீனவர்கள் துணையோடு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியிலும் பல்வேறு பகுதியிலிருந்து வந்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுவை வைத்திக்குப்பத்தில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ஆளுநர் மாளிகையில் இருந்து வாகனத்தில் கடற்கரைச்சாலை பழைய சாராய ஆலை வளாகம் வரைந்து அங்கிருந்து நகராட்சி பேட்டரி காரில் மாசிமகம் நடக்கும் பகுதிக்கு மக்களுக்கு இடையூரின்றி ஆளுநர் வந்தடைந்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் ஆளுநரை வரவேற்று அழைத்து சென்றனர்.தொடர்ந்து மதியம் மாசிமக தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்களுக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அன்னதானம் வழங்கினார்.

    மாசிமகத்தையொட்டி புதுவையில் நகர பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அஜந்தா சந்திப்பு வழியாக வந்த கார், கனரக வாகனங்கள் சிவாஜி சிலை வழியாக திருப்பிவிடப்பட்டது. ஏஎப்டி பஸ்நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக வழியெங்கும் நீர், மோர், பானகிரகம் உட்பட நீர் ஆகாரங்களும், பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    June 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.