Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    ஆன்மீகம்

    புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமநாதபுரம்: ஏர்வாடி தர்ஹா 851-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851-ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29-ல் புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புன் தொடங்கியது. அதனையடுத்து மே 9-ல் கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மே 22 அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.

    தர்ஹாவை மூன்று முறை சந்தனக்கூடு வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. திருவிழாவை காண ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    நேற்று முன்தினம் இரவு முதல் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் என பல்வேறு மதத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்றனர்.

    மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏர்வாடி தர்ஹாவுக்கு இயக்கப்பட்டன. தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இத்திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் சபை மற்றும் ஹக்தார்கள் செய்திருந்தனர். இதனையடுத்து மே 28-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கொடியிறக்கப்பட்டு, நெய் சோறு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    85 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி – அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    July 7, 2025
    ஆன்மீகம்

    ட்ரோன்களில் புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக ஹைலைட்ஸ்

    July 7, 2025
    ஆன்மீகம்

    காசவளநாடுபுதூர் கிராமத்தில் மொஹரம் கொண்டாடிய இந்துக்கள் – தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

    July 7, 2025
    ஆன்மீகம்

    ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…’ – திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

    July 7, 2025
    ஆன்மீகம்

    திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

    July 7, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் தரிசனம்

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சி முகாம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
    • ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
    • சமூகநீதி விடுதிகள்: சமத்துவ சமுதாயத்துக்கு அடித்தளம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது
    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.