Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பழநி | பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய மூன்றாம் படை வீடு
    ஆன்மீகம்

    பழநி | பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய மூன்றாம் படை வீடு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழநி | பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய மூன்றாம் படை வீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடியுடன் வரத் தொடங்கினர். விழாவின் 6-ம் நாளான நேற்று (ஏப்.10) மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம்,காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பழநி மலைக்கோயில் மற்றும் பாராவேல் மண்டபம் முழுவதும் 2 டன்னுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் பழநியில் குவிய தொடங்கினர்.

    பழநி கிரிவல வீதிகள், சந்நிதி வீதி உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் வெள்ளத்தில் பழநி தத்தளித்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவல வீதிகளில் ஆடி வந்தனர். மலைக்கோயிலுக்கு செல்ல யானைப்பாதை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

    விரைவு தரிசன கட்டண சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் தொலைந்து போன குழந்தைகள், பக்தர்களை எல்இடி திரையில் புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களை குடும்பத்துடன் சேர்க்க, காவல் துறை சார்பில் பழநி மலைக்கோயில், கிரிவலப்பாதை, பேருந்து நிலையம் உட்பட 7 இடங்களில் பெரிய ‘எல்இடி’ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.குற்ற சம்பவங்களை தடுக்க பழநி அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 420 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று (ஏப்.11) மாலை நடைபெறுகிது. பிற்பகல் 1 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    ஆன்மீகம்

    உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆவடி​ மாநகராட்சியைக் கண்டித்து ஆக.28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு
    • வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை கீல்வாதம் எவ்வாறு அதிகரிக்கிறது: இரண்டிற்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
    • இந்த எளிய 30-வினாடி சமநிலை சோதனை உங்கள் வீழ்ச்சி அபாயத்தை கணிக்க முடியும், குறிப்பாக நடுத்தர வயது பெரியவர்களுக்கு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.