
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, இவ்விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைய உள்ளது.
இதையொட்டி திருச்சானூர் தாயார் கோயிலில் வாகன பராமரிப்பு பணிகள், வர்ணம் தீட்டும் பணிகள், மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் என அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

