Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
    ஆன்மீகம்

    பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று (திங்கள் கிழமை) தயாரானது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று இரவு குண்டம் தயாரானது.

    அம்மன் அழைத்தல் நிகழ்வு: இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 4மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, கோயில் பூசாரி ராஜசேகர் மற்றும் கோயில் பூசாரிகள், கட்டளைதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டம் இறங்கினர்.

    இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா, ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இன்று அதிகாலை அமுதா ஐஏஎஸ், குண்டம் இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டார்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்: குண்டத்தின் இரு பகுதிகளிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்புப்பாக நிறுத்தப்பட்டு, பக்தர்கள் முறையாக குண்டமிறங்க உதவினர். தமிழகம், கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள், காவல்துறையினர், அதிரடிப்படையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், திருநங்கையர் என பல்லாயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பின், கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவுள்ளது.

    குண்டம் விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் தங்க கவசம் அணிந்து வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    சிறப்பு பேருந்துகள் இயக்கம்: பண்ணாரி மரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நாளை (9-ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 10-ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 11-ம் தேதி தங்கரத புறப்பாடும் நடக்கிறது. 12-ம் தேதி பவுர்ணமி திருவிளக்கு பூஜையும், ஏப்ரல் 14-ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

    July 25, 2025
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்

    July 24, 2025
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடல்

    July 24, 2025
    ஆன்மீகம்

    திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 24, 2025
    ஆன்மீகம்

    வேந்தன்பட்டியில் வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் மகிமைகள்!

    July 23, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.14 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
    • அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு: பொதுவான வயிற்று பாக்டீரியாக்கள் 12 மில்லியன் புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்
    • சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்
    • மோசமான கொழுப்பைக் குறைக்க 4 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.