Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
    ஆன்மீகம்

    பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு, 11-ம் நாளான நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் புறப்பாடாயினர்.

    திருக்கல்யாணத்தையொட்டி, வெள்ளி சிம்ம வாகனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலக்கரையிலுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது, மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரை சந்திப்பு மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமிகள், சந்திப்பு மண்டபத்திலிருந்து கோயில் வரையுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோயிலுக்குள் ஆறுகால் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர் பின்னர், மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பிற்பகல் 1.25 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    இரவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி அம்பாரி வாகனத்திலும், தெய்வானை அம்மன் ஆனந்தராயர் புஷ்பப் பல்லக்கிலும் எழுந்தருளினர். பின்னர், 16 கால் மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மீனாட்சி – சுந்தரேசுவரரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து, 13-ம் நாளான இன்று (மார்ச் 19) காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 14-ம் நாளான மார்ச் 20-ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருக்கல்யாணம் பிற்பகல் 12.15 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண மேடைக்கு வர தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் தாமதமானது. இதனால் பிற்பகல் 1.25 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முகூர்த்த நேரத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தின்போது திருமணமான பெண்கள் புது மாங்கல்யம் அணிந்து கொள்வர். ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக திருக்கல்யாணம் நடைபெற்றதால் பெண்கள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா கூறுகையில், ‘திருக்கல்யாணத்துக்கான முகூர்த்த நேரம் பிற்பகல் 1.35 மணி வரை இருப்பதாக சிவாச்சாரியார்கள் கூறினர். அதனால் அந்த நேரத்துக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    ஆன்மீகம்

    உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நிறுத்தியிருந்த ஜீப்பை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலை – கொடைக்கானல் மக்கள் அதிர்ச்சி
    • ஏன் தினமும் மூல தக்காளியை சாப்பிடுவது இதயம், தோல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கூலி’ விமர்சனம்: ரஜினி – லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?
    • கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
    • நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்வதற்கு முன் இந்த 7 காசோலைகளைத் தவிர்க்கக்கூடாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.