Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    ஆன்மீகம்

    நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகர்கோவில்: திரு​வனந்​த​புரம் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, குமரி மாவட்​டத்​திலிருந்து சுவாமி விக்​ரகங்​கள் புறப்​பாடை முன்​னிட்டு பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில், மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள் மாற்​றும் பாரம்​பரிய நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

    திரு​வனந்​த​புரம் அரண்​மனை​யில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, கன்​னி​யாகுமரி மாவட்​டம் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன், வேளிமலை குமாரசு​வாமி, தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்​ரகங்​கள், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​படும்.

    இந்த ஆண்டு நவராத்​திரி விழா வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது. இவ்​விழா​வில் பங்​கேற்க சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன் நேற்று முன்​தினம் காலை​யில் சுசீந்​திரத்​திலிருந்து பல்​லக்​கில் புறப்​பா​டாகி, மாலை​யில் பத்​ம​நாபபுரம் நீல​கண்ட சுவாமி கோயிலை அடைந்​தார். நேற்று அதி​காலை​யில் வேளிமலை குமாரசு​வாமி விக்​ரகம், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் உள்ள தேவாரக்​கட்டு சரஸ்​வதி அம்​மன் கோயிலை வந்​தடைந்​தது. திரு​வி​தாங்​கூர் சமஸ்​தான மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள், சுவாமி ஊர்​வலத்​தின் முன்​னால் கொண்டு செல்​லப்​படும்.

    பத்​ம​நாபபுரம் அரண்​மனை உப்​பரிகை மாளி​கை​யில் நேற்று காலை 7.30 மணி​யள​வில் நடை​பெற்ற விழா​வில், மன்​னரின் உடை​வாளை கேரள தொல்​லியல் துறை அமைச்​சர் கடனப்​பள்ளி ராமச்​சந்​திரன், குமரி மாவட்ட திருக்​கோ​யில்​களின் இணை ஆணை​யர் ஜான்சி ராணி​யிடம் ஒப்​படைத்​தார். அதை, அவர் பத்​ம​நாபபுரம் அரண்​மனை ஊழியர் மோக​னகு​மாரிடம் வழங்​கி​னார். அப்​போது, தமிழக, கேரள போலீ​ஸார் அணிவகுப்பு மரி​யாதை செலுத்​தினர். நிகழ்ச்​சி​யில், விஜய்​வசந்த் எம்​.பி., அமைச்​சர் மனோதங்​க​ராஜ், குமரி ஆட்​சி​யர் அழகுமீ​னா, எஸ்​.பி. ஸ்டா​லின், கேரள எம்​எல்​ஏக்​கள் ஹரீந்​திரன், வின்​சென்ட், பத்​ம​நாபபுரம் சார் ஆட்​சி​யர் வினய்​கு​மார் மீனா கலந்​து​கொண்​டனர்.

    உடை​வாள் கைமாறியதும் தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன. யானை மீது சரஸ்​வதி தேவி விக்​ரகம், பல்​லக்​கு​களில் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்​கை, வேளிமலை முரு​கன் விக்​ரகங்​கள் வீற்​றிருக்க பெண்​களின் தாலப்​பொலி​யுடன் நவராத்​திரி விழா ஊர்​வலம் திரு​வனந்​த​புரத்​துக்கு புறப்​பட்​டது. சுவாமி விக்​கிரகங்​கள் இன்று (21-ம் தேதி) களியக்​கா​விளை எல்​லையை சென்​றடைகின்​றன. அங்​கு, கேரள ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் முன்​னிலை​யில் கேரள போலீ​ஸார் மற்​றும் அதி​காரி​களிடம் விக்​ரகங்​கள் ஒப்​படைக்​கப்​படும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

    September 21, 2025
    ஆன்மீகம்

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா

    September 20, 2025
    ஆன்மீகம்

    பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

    September 20, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்: திருப்​பதி மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

    September 19, 2025
    ஆன்மீகம்

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைத்தார்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து
    • விண்மீனின் மறைக்கப்பட்ட அதிசயங்களை வெளிப்படுத்தும் 8 தாடை-கைவிடுதல் பால்வீதி படங்களை நாசா பகிர்ந்து கொள்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்
    • தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
    • விண்கல் மழை அல்லது சனி குப்பைகள்? உமிழும் ஸ்ட்ரீக் திகைப்புகள் டெல்லி-என்.சி.ஆர் ஸ்கைலைன் | இந்தியா செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.