Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»தோல்நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் | ஞாயிறு தரிசனம்
    ஆன்மீகம்

    தோல்நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் | ஞாயிறு தரிசனம்

    adminBy adminJuly 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தோல்நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன் | ஞாயிறு தரிசனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மூலவர்: மெய்கண்டமூர்த்தி தல வரலாறு: 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேசும் திறனற்ற அழகுமுத்து என்பவர் கோயிலில் தோட்டப் பணிகளை செய்து வந்தார். குமரனின் நிவேதனப் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அர்த்தஜாம மணி அடித்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டார். பூஜை முடிந்த பிறகு அர்ச்சகர் அவரிடம் கூறிவிட்டு, பிரசாதத்தை அவர் அருகில் வைத்துவிட்டு சென்றார். அந்த பிரசாதம் தேரைக்கு உணவானது. இரவு 1 மணி அளவில் விழித்த அவருக்கு பசி மிகுதியானது. வாய் பேச முடியாத அவர், பூட்டிய கோயிலுக்குள் அங்கும் இங்கும் கத்தியபடி அலைந்தார்.

    அழகுமுத்துவின் அழுகுரல் கேட்ட முருகன், பாலன் உருவத்தில் வந்து அவருக்கு பஞ்சாமிர்தம் அளித்து பேசும் திறனைஅருளினார். அழகுமுத்து தனது கணீர் குரலால் பல கோயில்களுக்குச் சென்று பாடினார். வயதானபின்னர் வைகாசி விசாகதினத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் 1,000கால் மண்டபத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது ஆவி நேராக நாகை மெய்கண்ட மூர்த்தி முருகன் சந்நிதிக்கு வந்தது. மாலை சாயரட்சை தீபாராதனை சமயத்தில் முருகனோடு ஐக்கியமானார் அழகுமுத்து. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தினத்தில் ஐக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது.

    கோயில் சிறப்பு: நாகையில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயிலில் மேகராஜனின் உபயத்தில் பூஜைகள் நடந்தன. காலப்போக்கில் கோயில் விக்கிரகங்கள் பூமியில் புதைந்துவிட்டன. புதுச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் கனவில் தோன்றிய முருகன், தாம் இருக்கும் இடத்தை உணர்த்தி, நாகை காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்குவீதியில் தமக்கு கோயில் அமைக்க பணித்தார். அதன்படி இந்த குமரன் கோயில் அமைக்கப்பட்டது. தோல் நோய் நீக்குபவராக முருகன் விளங்குகிறார். அமைவிடம்: நாகை – தஞ்சை சாலையில் நாலுகால் மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7-12, மாலை 5-9.30 மணி வரை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

    September 24, 2025
    ஆன்மீகம்

    ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம் 

    September 23, 2025
    ஆன்மீகம்

    கொடியேற்றத்துக்கு தர்பை தயார்: திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

    September 23, 2025
    ஆன்மீகம்

    திரிபுராவில் பிரதமர் திறந்துவைக்கும் திரிபுர சுந்தரி கோயில்: மத்திய அரசால் ரூ.52 கோடியில் புனரமைப்பு

    September 22, 2025
    ஆன்மீகம்

    மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

    September 22, 2025
    ஆன்மீகம்

    மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 
    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்
    • இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை
    • வீட்டிலுள்ள கால் சோளங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.