Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    ஆன்மீகம்

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    adminBy adminJuly 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று (ஜூலை 26) காலை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பேராலயத்தின் 443-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது.

    விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

    கொடியேற்றம்: கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன், மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராலயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் காலை 8.45 மணியளவில் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என்று முழக்கமிட்டனர்.

    கொடி ஏற்றப்பட்ட போது சமாதானத்தை குறிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து ஏராளமான வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

    பக்தர்கள் நேர்ச்சை: பக்தர்கள் நேர்ச்சையாக பால் குடம், வாழைத்தார் போன்றவைகளை கொடிமரத்தின் பீடத்தில் வைத்து வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கொடிமரத்தின் பீடத்தில் வைத்து அன்னையிடம் ஒப்புக் கொடுத்தனர். கொடியேற்றம் முடிந்ததும் பால் மற்றும் பழத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பனிமய மாதா பேராலய கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்பி தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில் சாதாரண உடையில் ஏராளமான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    பொன் மகுடம்: தொடர்ந்து பகல் 12 மணிக்கு கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஆல்பர்ட் ஜான்சன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்கள் அணிவிக்கப்பட்டன. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9-ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி ஆகியவை ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது.

    தேர் பவனி: ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழாவில் இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. அன்னையின் பெருவிழா தினமான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணியளவில் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு, அருட்சகோதரர் மிக்கேல் அருள்ராஜ்ன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திரிபுர சுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

    July 25, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

    July 25, 2025
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்

    July 24, 2025
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடல்

    July 24, 2025
    ஆன்மீகம்

    திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 24, 2025
    ஆன்மீகம்

    வேந்தன்பட்டியில் வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் மகிமைகள்!

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா!
    • முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு
    • மக்களிடம் நீதி கேட்டு மாநிலம் தழுவிய நெடும் பயணம்: மல்லை சத்யா திட்டம்
    • அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சி: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு
    • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு விடுவிப்பு: ஏர் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.