Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»தூத்துக்குடி | குலசை முத்தாரம்மன் கோயில் மருத்துவ மைய பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்
    ஆன்மீகம்

    தூத்துக்குடி | குலசை முத்தாரம்மன் கோயில் மருத்துவ மைய பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடி | குலசை முத்தாரம்மன் கோயில் மருத்துவ மைய பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் புதிய மருத்துவ மையத்தைத் திறந்து மருத்துவர், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அமைச்சர்கள் இன்று வழங்கினர்

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று (13.04.2025) சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சென்று, அங்கு பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தினை திறந்து வைத்து, புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    2024 -25 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பில், ”அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதியதாக அமைக்கப்படும்.” என அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு நேரில் சென்று அங்கு பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தினை திறந்து வைத்து மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்த மருத்துவ மையத்தில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. தற்போது வரை 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 7,50, 000 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அன்புமணி, ஞானசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.14 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    July 23, 2025
    ஆன்மீகம்

    நெல்லை காந்திமதியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 23, 2025
    ஆன்மீகம்

    சபரிமலையில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு: தரிசன முன்பதிவுகள் தொடங்கின

    July 22, 2025
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு

    July 22, 2025
    ஆன்மீகம்

    சங்கரன்கோவில் கோமதி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 22, 2025
    ஆன்மீகம்

    ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி மயமாகிறது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்!

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கருப்பன் வரான் வழி மறிக்காதே…’ – சூர்யாவின் ‘கருப்பு’ டீசர் எப்படி?
    • ‘தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • ஒரு செல்லப்பிள்ளை வெள்ளெலி பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • 3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
    • ராமேசுவரம் கோயிலில் ரூ.1.14 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.