Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்
    ஆன்மீகம்

    தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் கோயில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களிலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதலாவதாக பிரேக் தரிசன முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக கோயில் சிவாச்சாரியார்களுடன் இணைந்து தரிசன நேரத்தை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ரூ.50 தரிசன கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவரிசையின் நீளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கவும், அதேபோல் கோயிலில் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியை நியமிக்கவும் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை வழங்கியுள்ளார். இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இந்த கோயிலுக்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பெரும் திட்ட வரைவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் கைபேசி கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசனை செய்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். சுவாமி தரிசனம் செய்வதில் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என பாகுபாடு காட்ட வேண்டாம். உள்ளூர் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    அறங்காவலர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்து சமய அறநிலைய துறை சார்பில் கூடுதல் துணை ஆணையர் உள்பட கோயிலுக்கு தேவையான அனைத்து பணியாளர்களையும் காலி பணியிடங்கள் இல்லாமல் நிரப்பப்படும். கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை 3 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும்” என்றார்.

    இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன், அறநிலைய துறை ஆணையர் பி.என்.தரன், மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அதிகாரி ராம்பிரதீபன், அண்ணாமலையார் கோயில் ஆணையர் பரணிதரன், திட்ட இயக்குநர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    தினமும் 100 கிலோ வண்ண மலர்களால் திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம்

    September 9, 2025
    ஆன்மீகம்

    நடராஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம்: ரூ.10 லட்சம் மதிப்பில் பக்தர் வழங்கினார்

    September 9, 2025
    ஆன்மீகம்

    பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்

    September 8, 2025
    ஆன்மீகம்

    சந்​திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது

    September 8, 2025
    ஆன்மீகம்

    ‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்

    September 8, 2025
    ஆன்மீகம்

    கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
    • குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்
    • நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்
    • குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் அறிகுறிகளில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.