Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா
    ஆன்மீகம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா

    adminBy adminSeptember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயம், பண்டைய பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் மையமாகத் திகழ்கிறது. வைணவத்தைப் பரப்புவதையும், பக்தி மார்க்கப் பணிகளை செய்வதையும் தலையாயப் பணியாகக் கொண்டு இம்மையம் செயல் பட்டு வருகிறது.

    வைணவ சம்பிரதாயம் செழித்து வளர, பகவத் ராமானுஜர் சீரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். தனது ஆயிரக்கணக் கான சீடர்களில் இருந்து 74 பேரைத் தேர்வு செய்து, ஸ்ரீமன் நாராயணனின் சேவைக்காக நியமித்தார். இவர்கள் வைணவ சம்பிரதாயத்தின் கடமைகளை உலகம் முழுவதும் பரப்பு வதையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர்.

    74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவரின் வம்சாவளியில் அவதரித்த உ.வே. ஸ்ரீ அத்தங்கி திருமலாச்சாரியாரின் கைங்கர்யம் அளப்பரியது. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை 200 ஆண்டு காலபழமையானது. லட்சுமி நரசிம்ம பெருமாளை பிரதான தெய்வமாகக் கொண்டு, இங்கு தினசரி ஆராதனை நடந்து வருகிறது.

    அத்தங்கி ஸ்ரீ திருமலாச்சாரி யாரின் திருக்குமாரன் உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார், தனது தந்தையின் வழியில் ஆச்சாரியராக இருந்து பல மாணவர்களுக்கு வைணவ சம்பிரதாயங்களை உபதேசித்து வருகிறார். மேலும், பல இடங்களில் உபன்யாச நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமாளிகை யில் நவராத்திரி விழா கோலாகல மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொம்மைகள், முறை யாகப் பராமரிக்கப்பட்டு, நவராத்திரி விழாவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

    கீதோபதேச பொம்மைகள்

    தந்தையாரின் விருப்ப விழா: இதுதொடர்பாக உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார் கூறும்போது, “எனது தந்தையாரின் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்ற நோக்கில், வைணவ சம்பிரதாயத்தை செழித்து வளரச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் அவரது விருப்ப விழாவாக இருந்த நவராத்திரி வைபவத்தை நான் ஒவ்வொரு வருட மும் நிகழ்த்தி வருகிறேன்.

    நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொம்மையும் மிகவும் பழமை வாய்ந்தது. மகாவிஷ்ணு, கண்ணன், ராமபிரான், வாமன அவதார பொம்மைகள் 80 ஆண்டு காலம், கீதோபதேசம், ருக்மிணி சமேத ஸ்ரீ கிருஷ்ணன் பொம்மைகள் 100 ஆண்டு காலம், இதர பொம்மைகள் 200 ஆண்டு காலம் பழமையானவை.

    இந்த பொம்மைகளை பராமரிப்பது சற்று கடினமான செயல் தான். அவற்றை முறையாகப் பராமரித்து, அதன் பாரம்பரி யத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த கொலு மூலம் இளம் தலைமுறையினருக்கு, நமது பண்பாடு, கலாச்சாரம், வைணவ சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி வருகிறேன். மனிதன் ஆன்மிகரீதியாக தன்னை உயர்த்திக் கொண்டு, இறைவனோடு கலக்க வேண்டும் என்பதையே இவ்விழா வலியுறுத்துகிறது. அதற்காக ஒவ்வொரு ஆச்சாரியரும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருமலையில் நாளை கருட சேவை: ஆண்டாள் சூடிய மாலை திருப்பதி புறப்பட்டது

    September 27, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா – சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

    September 27, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம்: பக்தர்களின் மனம் தாராளம்

    September 27, 2025
    ஆன்மீகம்

    மகாலட்சுமி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    September 26, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

    September 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லடாக் நிலவரம் | சோனம் வாங்சுக் ஜோத்பூர் சிறைக்கு மாற்றம்: லே நகரில் 4-வது நாளாக தொடரும் ஊரடங்கு!
    • ‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக
    • இந்த ஒரு ஹார்மோன் இருட்டிற்குப் பிறகு சாப்பிட்டால் உடலில் அழிவை ஏற்படுத்தும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 4 தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்
    • ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ ஆவணத்தில் தனது பெயர் – எலான் மஸ்க் சொல்வது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.