பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இவர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்தபின் தேன், சர்க்கரை கலந்த தினை மாவும், மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவு பால் இலவசமாக வழங்கப்பட்டது.
தினமும் இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து அருள் பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11, மாலை 5 மணியளவில் சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

