Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: “முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுக்குப் பின்னர் ஜூலை 14-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 7.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதற்கான திருப்பணிகளை ஆய்வு செய்தோம். இரண்டரை கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சி ஏற்பட்டபிறகுதான் 3117 கேயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவும் ஏற்படுத்தப்பட்டது.

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.400 கோடி செலவில் குடமுழுக்கு நடைபெறுவதால் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அறுபடை வீடுகள் தவிர்த்து 141 முருகன் கோயில்களில் 884 பணிகள் ரூ.1,085 கோடியில் நடந்து வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் பெருமை சேர்த்ததுபோல் எந்த ஆட்சியிலிரும் பெருமை சேர்க்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோப்கார் முதற்கட்ட ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கான டெண்டர் கோரப்படும் நிலையில் உள்ளது.

    திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம். இன்னார் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில்லை. நடைபெறப்போகும் ஒன்றை தாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என சொன்னபிறகு நடத்தப்படுவதாக கூறிக் கொள்கின்றனர். தானாக கனியும் கனியையும் தங்களது மந்திர சொற்களால் கனிந்ததாக சொல்லிக் கொள்கின்றனர்.

    பழனி அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவிலை. எங்கும் அரசியல் வாடை இல்லை. ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் லாப நோக்கத்தோடும் நடைபெறுகிறது. மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார். அதன் முடிவு 2026 சட்டமன்றத் தேர்தலில் தெரியும்,” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

    July 18, 2025
    ஆன்மீகம்

    கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

    July 17, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் காணிக்கை

    July 17, 2025
    ஆன்மீகம்

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத வழிபாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மும்முரம்

    July 16, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை

    July 16, 2025
    ஆன்மீகம்

    மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீடுகளையும், முந்திரிக் காடுகளையும் அழித்துவிட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா? – அன்புமணி
    • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
    • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
    • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
    • கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.