Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஜூலை 8-ல் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ‘பாஸ்’ இருந்தால் மட்டுமே வடம் பிடிக்க அனுமதி
    ஆன்மீகம்

    ஜூலை 8-ல் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ‘பாஸ்’ இருந்தால் மட்டுமே வடம் பிடிக்க அனுமதி

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜூலை 8-ல் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ‘பாஸ்’ இருந்தால் மட்டுமே வடம் பிடிக்க அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: கண்டதேவி தேரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல் அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்தால் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துககு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    இந்த ஆண்டு சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆனித் திருவிழா ஜூன் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. ஜூலை 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தேவகோட்டை சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில், டிஎஸ்பி பார்த்திபன், அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜூலை 8-ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டைப் போலவே அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் தேர் வடம் பிடித்து இழுக்க டிஎஸ்பி அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணிக்குள் கோயிலுக்கு வந்துவிட வேண்டும்.

    சாதி ரீதியான அடையாளங்கள், ஆடைகள் அணியக் கூடாது. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை மட்டுமே அணிய வேண்டும். சாதி ரீதியான துண்டு கொண்டுவரக் கூடாது. வடம் பிடித்து இழுப்போரின் ஆதார் அட்டை நகல், செல்போன் எண்ணுடன் ஜூன் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிகக்க வேண்டுமென கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

    July 18, 2025
    ஆன்மீகம்

    கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

    July 17, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் காணிக்கை

    July 17, 2025
    ஆன்மீகம்

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத வழிபாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மும்முரம்

    July 16, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை

    July 16, 2025
    ஆன்மீகம்

    மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீடுகளையும், முந்திரிக் காடுகளையும் அழித்துவிட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா? – அன்புமணி
    • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
    • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
    • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
    • கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.