Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, January 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    ஆன்மீகம்

    சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    adminBy adminJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 21 Jul, 2025 06:30 AM

    Published : 21 Jul 2025 06:30 AM
    Last Updated : 21 Jul 2025 06:30 AM

    சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    கோவை கிணத்துக்கடவை அடுத்துள்ள சூலக்கல், முன்பு ஒரு காலம் சிறந்த மேய்ச்சல் பகுதியாக இருந்துள்ளது. அவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைக்கும் பணியை வேலைக்கார பையன்கள் செய்து வந்தனர்.

    அவ்வாறு மேய்ந்து வந்த பசுக்களில் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால், ஒருநாள் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு அவற்றை விரட்டியுள்ளனர்.

    அப்போது ஓடிய பசுக்களில், ஒரு பசுவின் கால்பட்டு, சுயம்பு ஒன்று உடைந்தது. உடைந்த அவ்விடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. அந்த சுயம்பு வடிவக் கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டுள்ளனர். அவ்விடத்தில் பெண் தெய்வம் ஒன்று எழுந்தருளியுள்ளதை அனைவரும் உணர்ந்தனர்.

    அன்று இரவு பசுவின் சொந்தக்காரர் கனவில் அம்பிகை தோன்றி, சுயம்புவாகத் தோன்றியுள்ள தான்தான் மாரி என்றும், சுயம்புவைச் சுற்றிக் கோயில் அமைத்து வழிபடுமாறும் கட்டளை இட்டுள்ளாள்.

    பசுவின் கால் பதிந்த அந்த அடையாளம் இன்னும் சுயம்புவில் நன்கு தெரிவதை அபிஷேகம் செய்யும்போது பார்க்கலாம். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால், சூலக்கல் என்று ஆயிற்று. அவ்விடத்தில் மாரி உறைவதால் சூலக்கல் மாரி என்று பெயர் பெற்றது.

    ஊர்ப்பெயரும் சூலக்கல் என்றாயிற்று. அவ்வாறே சுயம்புவை மையமாக வைத்துக் கருவறையும், மகா மண்டபமும் கருங்கல்லால் அமைத்தனர். தற்போது கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

    December 1, 2025
    ஆன்மீகம்

    வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்

    December 1, 2025
    ஆன்மீகம்

    திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

    December 1, 2025
    ஆன்மீகம்

    வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.21-ல் தொடக்கம்: 27-ல் சூரசம்ஹார உற்சவம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு

    December 1, 2025
    ஆன்மீகம்

    சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டாலியா vs உப்மா: எந்த காலை உணவு உடல் எடையை குறைக்க உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கழிப்பறை மூடியை கழுவுவதற்கு முன் மூடுவதற்கான மறைக்கப்பட்ட காரணம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆரம்ப அறிகுறிகள், தெரிந்து கொள்ள வேண்டிய தடுப்பு குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புத்தாண்டு எடை இழப்பு பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு பற்றி ஹார்வர்ட் ஆவணம் எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரணதம்பூர் தேசிய பூங்காவில் பிரியங்கா காந்தியின் வாகனத்தின் முன் புலி வந்தபோது என்ன நடந்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.