Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்
    ஆன்மீகம்

    சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது.

    அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலை​யத் துறை சார்​பில் ரூ.100 கோடி​யில் திருப்​பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையடுத்​து, கடந்த 1-ம் தேதி கும்​பாபிஷேக விழா யாக​சாலை பூஜை​யுடன் தொடங்​கியது. தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யில் கேரள முறைப்​படி யாகங்​கள் நடை​பெறுகின்​றன.

    அதே​போல, மூலவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​களு​டன் பூஜைகளும், 5 ஹோம குண்​டங்​களில் வேள்வி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. இன்று காலை 10-ம் கால யாக​சாலை பூஜை நடக்​கிறது. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்​குள் ராஜகோபுர கலசங்​கள், மூல​வர், வள்​ளி, தெய்​வானை விமான கலசங்​களுக்கு தந்​திரி மற்​றும் போத்​தி​களும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்தி கலசங்​களுக்கு சிவாச்​சா​ரி​யார்​களும், பெரு​மாள் கலசங்​களுக்கு பட்​டாச்​சா​ரி​யார்​களும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்​கின்​றனர்.

    கும்​பாபிஷேக விழாவை கண்​காணித்து சிறப்​பாக நடத்த 3 ஐஏஎஸ் அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். திருச்​செந்​தூர் நகரில் 6 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப்பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். 30 காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. விமான தளத்​தில் மடா​திப​தி​கள், நீதிப​தி​கள், அமைச்​சர்​கள், அதி​காரி​கள் மற்றும் விஐபிக்​கள் என 800 பேர் மட்​டுமே அனு​ம​திக்​கப்பட உள்​ளனர்.

    விழாவையொட்டி 400 சிறப்பு பேருந்​துகளும், நகரில் தற்​காலிக வாகன நிறுத்​தமிடங்​களில் இருந்து ரதவீ​தி​கள் வரை 30-க்​கும் மேற்​பட்ட நகர பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளன. நெல்​லை​யில் இருந்து திருச்​செந்​தூருக்கு சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. பக்​தர்​கள் கும்​பாபிஷேகத்தை பார்ப்​ப​தற்கு 70 இடங்​களில் எல்​இடி திரைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. கோயில் வளாகம், நகர் முழு​வதும் 1,000 சிசிடிவிக்​கள் வைக்​கப்​பட்டு கண்​காணிக்​கப்​படு​கிறது. மேலும், ட்ரோன் கேமரா மூல​மாகவும் கண்​காணிக்​கப்​படுகிறது.

    மொத்​தம் 1,500 செவ்​வாழை மரங்​கள், 5 ஆயிரம் செங்​கரும்​பு​கள், 1,500 இஞ்சி குலைகள், பலாப்பழங்​கள், மா, முந்​திரி கொத்​து, பாக்​குமரங்​கள் ஆகிய​வற்​றின் மூலம் கோயில் வளாகம், உட்​பிர​காரம் ஆகியவை அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. கோயி​லில் உள்ள 137 அடி உயர பிரம்​மாண்ட ராஜகோபுரத்​தில்​ நேற்​றிர​வு லைட்​ ஷோ காண்​பிக்​கப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருமலையில் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம்

    July 6, 2025
    ஆன்மீகம்

    பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் | ஞாயிறு தரிசனம்

    July 6, 2025
    ஆன்மீகம்

    திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பர்மிங்காம் வானிலை: எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி வாய்ப்பை பறிக்குமா மழை?
    • மீண்டும் ஹீரோவானார் சரவணன்!
    • தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!
    • ஃப்ரிடா கஹ்லோ செல்வாக்கு செலுத்துவதற்கு முன்பே அசல் செல்வாக்கு செலுத்துபவர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.