Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»“சார் தாம் யாத்திரையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்” – உத்தராகண்ட் முதல்வர் தாமி
    ஆன்மீகம்

    “சார் தாம் யாத்திரையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்” – உத்தராகண்ட் முதல்வர் தாமி

    adminBy adminMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “சார் தாம் யாத்திரையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்” – உத்தராகண்ட் முதல்வர் தாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டேராடூன்: உத்தராகண்ட்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளன. சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “சார் தாம் யாத்திரை சீராகவும், பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு மாநில அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்” என தெரிவித்துள்ளார்.

    சார் தாம் யாத்திரை மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. பயண வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உண்மையான நிலைமையை மதிப்பிடவும், தேவையான மேம்பாடுகளை உறுதி செய்யவும், சார் தாம் பயண வழித்தடங்களை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து செயலாளர்களுக்கும் முதல்வர் உத்தரவிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொருத்தமான வழிமுறைகளை வெளியிட தலைமைச் செயலாளருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் உடனடியாக நிவர்த்தி செய்ய யாத்திரையின் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு இன்னும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வரவிருக்கும் மழைக்காலத்துக்கு முன்னர் அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதலாக, மாநிலத்தில் நடைபெறும் பிற மத யாத்திரைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சார் தாம் யாத்திரையை பக்தர்களுக்கு மறக்கமுடியாத, பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவமாக மாற்ற மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    காரைக்காலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்

    July 10, 2025
    ஆன்மீகம்

    திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

    July 10, 2025
    ஆன்மீகம்

    நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

    July 9, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

    July 8, 2025
    ஆன்மீகம்

    கிராம பூசாரியாக இளைஞரை தேர்வு செய்த ‘மைசூர் காளை’ – கிருஷ்ணகிரி அருகே கோயிலில் நூதனம்

    July 8, 2025
    ஆன்மீகம்

    கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம்: அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
    • உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்: 3 உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026-ல் ஸ்டாலினுக்கு ‘பை பை’ சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர் – இபிஎஸ் ஆரூடம்
    • தொற்று மற்றும் செரிமான சிக்கல்களைத் தடுக்க இந்த பருவமழை பருவத்தில் தவிர்க்க 5 பழங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.