Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    ஆன்மீகம்

    சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கோயில் திருவிழாக்களில் சாதிக்கு முக்கியத்துவம் தராமல், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர் திருவிழாவில், பட்டியல் சமுதாய மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி இத்திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக்கோரி பெரியசாமி என்ற நீலவண்ணத்து நிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் ஆஜராகி, “இந்த கோயில் தேர் திருவிழா வரும் ஏப்.6-ம் தேதி தொடங்கி ஏப்.10-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பிற சமுதாய மக்களுக்கு விழாவை நடத்த அனுமதி வழங்கியிருப்பது போல இந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி விழாவை நடத்த அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிட்டார்.

    அப்போது, விழா அழைப்பிதழில் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அச்சிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, “கோயில் திருவிழாக்களில் சாதி சங்கங்களுக்கோ, தனிப்பட்ட நபர்களுக்கோ எந்த முன்னுரிமையும் அளிக்கக்கூடாது என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதே?” என்றார்.

    அதற்கு அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “பொதுவாக இனிவரும் நாட்களில் கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழ் மற்றும் நோட்டீஸில் சாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டுமென ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “கோயில் திருவிழாக்களில் சாதிக்கு இடமில்லை எனும்போது மனுதாரரின் கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது. கோயில் திருவிழாக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினருக்கு ஒதுக்கும் நடைமுறையை அறநிலையத்துறை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழாவில் பங்கேற்க அல்லது நடத்த விரும்பும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அல்லது உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும்.

    நோட்டீஸ் மற்றும் அழைப்பிதழிலும் அதுபோல சாதிப்பெயர்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நன்கொடை அளிப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினாலும் கூட அதிலும் சாதிப்பெயர்களை தவிர்க்க வேண்டும். யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது சாதியை முன்னிலைப்படுத்தியோ கோயில் திருவிழாக்களை நடத்தவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது”, என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    ஆன்மீகம்

    உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    • குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • 5 பெண்களை வலிமையாக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் (மேலும் வயதானதை மெதுவாக்கும்)
    • இந்திய-ஆரிஜின் டாக்டர் வினய் பிரசாத் வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு எஃப்.டி.ஏ-க்கு திரும்புகிறார்; லாரா லூமர் இதை ‘மிகச்சிறந்த முடிவு’ என்று அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.