பின்பு ஆளுநர் மாளிகையில் தங்கிய திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார். நிலக்கல்லில் இறங்கிய திரவுபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் இரு முடி கட்டிய பின் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் சென்றார்.
அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

