
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

