
சென்னை: ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நோன்பு எடுக்கும் வழக்கம் கொண்ட மக்கள், கேதார கெளரி விரத நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்நாளில், மக்கள் வீடு மற்றும் கோயில்களில் நோன்பு எடுப்பார்கள்.

