Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»கூவாகம் சித்திரைத் தேரோட்டம்: அரவான் களப்பலியால் திருநங்கையர் சோகம்
    ஆன்மீகம்

    கூவாகம் சித்திரைத் தேரோட்டம்: அரவான் களப்பலியால் திருநங்கையர் சோகம்

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கூவாகம் சித்திரைத் தேரோட்டம்: அரவான் களப்பலியால் திருநங்கையர் சோகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா, கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. சுவாமி உற்சவம் தினசரி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவான் சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள், பக்தர்கள் ஆகியோர் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (மே 13) நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற, தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள், அரவான் சுவாமியை தனது கணவராக ஏற்றுக் கொண்டு, கோயில் பூசாரிகள் கையில் தாலிக் கட்டிக் கொண்டனர். பட்டு புடவை, முகூர்த்த சேலை, கைகளில் வளையல் அணிந்தும், தலையில் பூக்களை சூடி மணப்பெண்ணாக அலங்கரித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆண்கள் உள்ளிட்ட பக்தர்களும், கோயில் பூசாரி கையில் தாலியை கட்டிக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு இன்று(மே 14) அதிகாலை முதல் மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயிலின் வடக்கே நிலை நிறுத்தப்பட்டிருந்த சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் சுற்றப்பட்டது. பின்னர், 3 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜங்கள், மார்பு பதக்கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடையாணி உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமி அரவானின் உருவம் வடிவமைக்கப்பட்டன.இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்களின் வெள்ளத்தில், கோயிலை சுற்றி உள்ள 4 மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர், பின்னர் நிலை நிறுத்தப்பட்டது. திருத்தேர் மீது விளை பொருட்களை வீசியெறிந்து விவசாயிகள் வேண்டிக் கொண்டனர். மேலும் திருநங்கைகள் மற்றும் பக்தர்களும் பூக்களை வீசினர். நாணயங்களும் வீசப்பட்டன. மேலும், சூடம் ஏற்றி, தேங்காயை சூரைவிட்டும், பக்தர்கள் வழிபட்டனர். தேரோட்டம் நிறைவு பெற்றதும், அழிகளம் நோக்கி திருத்தேர் புறப்பட்டது. திருத்தேரை பின்தொடர்ந்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்தபடி, ஓடினர்.

    நத்தம் கிராமம் பந்தலடி எனப்படும் அழிகளத்துக்கு திருத்தேர் சென்றதும், அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கணவர் அரவான் கொல்லப்பட்டதை அறிந்த திருநங்கைகள், பூசாரிகளின் கைகளால் தாலியை அறுத்து கொண்டும், கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தும், நெற்றியில் இருந்த திலகத்தை அழித்துவிட்டு, கிணற்றில் தலைமூழ்கினர். பின்னர் அவர்கள், வெள்ளை சேலையை உடுத்தி விதவை கோலத்தை ஏற்றனர். தங்க தாலியை, கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். மேலும் அவர்கள், குழுக்களாக இணைந்து, ஒப்பாரி வைத்து அழுதுபுலம்பி, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதன்தொடர்ச்சியாக, பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பலி சாதம் படையலிடப்பட்டன. பின்னர், இரவு 7 மணியளவில் அரவான் உயிர்ப்பிக்கும் நிகழ்வு, ஏரிக்கரை காளிக் கோயிலில் நடைபெறும். பின்னர், பந்தலடிக்கு திருத்தேர் கொண்டு வரப்பட்டு, அதன்பிறகு, அரவான் சிரசு மட்டும் சிறப்பு அலங்காரத்துடன் நத்தம், தொட்டி, கூவாகம் கிராமம் வழியாக, கோயிலுக்கு கொண்டு வரப்படும். சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்வர்.

    17-வது நாளான நாளை (மே 15) விடையாத்தி உற்சவமும், 18-வது நாளான வெள்ளிக்கிழமை ( மே 16) தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றதும், சித்திரை திருவிழா நிறைவு பெறும். இந்த விழாவையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சித்திரை திருவிழாவை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்

    August 14, 2025
    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா அல்லது நக்சலைட்டுகளா? – இபிஎஸ்
    • பில்லி எலிஷ் மற்றும் லிங்கின் பார்க் லொல்லபலூசா இந்தியா 2026 க்கு தலைப்பு? ரெடிட் வதந்திகள் இந்திய ரசிகர்களிடையே உற்சாகத்தைத் தூண்டுகின்றன – இங்கே நமக்குத் தெரியும்
    • நவ.2 கல்லறை திருநாள்: டெட் தேர்வு தேதியை மாற்ற கோரி முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்
    • ப்ரீடியாபயாட்டீஸில் வைட்டமின் டி இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை எவ்வாறு ஆதரிக்கக்கூடும்: ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதிய டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு மதியம் வரை உயர் நீதிமன்றம் கெடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.