
திருப்போரூர்: கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதையொட்டி, தினமும் லட்சார்ச்சனை நடைபெறுவதால், பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில், கந்த சஷ்டியின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

