Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
    ஆன்மீகம்

    கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

    adminBy adminJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

    சென்னை பூங்கா நகர் கந்​தகோட்​டத்​தில் நூற்​றாண்டு பழமை​யான முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் உள்​ளது. இக்​கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்​துக்​கு​மாரசு​வாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். கடந்த 2013-ம் ஆண்​டும் ஜூலை 15-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடந்​தது. கும்​பாபிஷேகம் நடந்து 12 ஆண்​டு​கள் முடிவடைந்த நிலையில், கந்​தகோட்​டத்​தில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கும்​பாபிஷேகம் நடத்து​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன.

    அந்த வகை​யில், கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி ரூ.91.50 லட்​சம் மதிப்​பீட்​டில் கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்​நி​தி​கள், மண்​டபங்​கள் புனரமைக்​கப்​பட்​டன. தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விக்​னேஸ்வர பூஜை​யுடன் யாக சாலை பூஜைகளு​டன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. தொடர்ந்​து, பிர​வேச பலி, கோ பூஜை, புண்​ணி​யாக வாசனம், எஜமானர் சங்​கல்​பம், கும்பலங்காரம், கலாகர்​ஷணம், தீபா​ராதனை​கள் நடந்​தன.

    3,386 கோயில்களில்.. இந்​நிலை​யில் கும்​பாபிஷேகம் நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, அவபிருத​யாகம், மஹா பூர்​ணாஹு​தி, தீபா​ராதனை நடந்​தது. பின்​னர், காலை 9.30 மணிக்கு கலசங்​கள் புறப்​பாடு நடந்​தது. தொடர்ந்​து, ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது, ‘வெற்​றிவேல் முரு​க​னுக்கு அரோக​ரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என பக்​தர்​கள் கோஷங்​களை எழுப்​பினர். கோபுரக் கலசத்​தில் ஊற்​றப்​பட்ட புனிதநீர் பக்​தர்​கள் மீது தெளிக்​கப்​பட்​டது.

    இதையடுத்து மூல​வர் முத்​துக்​கு​மாரசு​வாமிக்கு மஹா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. இவ்​விழா​வில் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, மேயர் பிரியா மற்​றும் திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 3,386 கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடை​பெற்​றுள்​ளது எனவும், அதில் 131 கோயில்​கள் முருகன் கோயில்​கள் எனவும்​ அமைச்​சர்​ பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரம் காணிக்கை

    July 17, 2025
    ஆன்மீகம்

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத வழிபாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மும்முரம்

    July 16, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை

    July 16, 2025
    ஆன்மீகம்

    மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

    July 16, 2025
    ஆன்மீகம்

    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    July 15, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்
    • பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களிலும் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிப்பு!
    • பள்ளியில் ‘பிரபலமாக’ இல்லாத ஒரு குழந்தையை சமாளிக்க 5 வழிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.