Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை
    ஆன்மீகம்

    ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் ரூ.25.12 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

    ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் 4.4 லட்சம் பக்தர்கள் திருப்பதி-திருமலை இடையே பயணித்துள்ளனர். பிரம்மோற்சவ விழாவின்போது முதன்முறையாக 28 மாநிலங்களில் இருந்து 298 குழுவினர் வந்திருந்து மாடவீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இதில் மொத்தம் 6,976 பேர் பங்கேற்றுள்ளனர். கருட சேவைக்கு மட்டும் 780 கலைஞர்கள் 37 குழுக்களாக பிரிந்து மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். 65 டன் மலர்கள் இந்த பிரம்மோற்சவ விழாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 36 எல்இடி தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு வாகன சேவைகள் ஒளிபரப்பப்பட்டன. 3,500 வாரி சேவகர்கள் சிறப்பாக பணியாற்றினார்.

    50 மருத்துவர்கள், 60 பாராமெடிக்கல் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். 14 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ சேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டன. 5,000 போலீஸார், 1,800 தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. கருட சேவையன்று மட்டும் 16 உணவு வகைகள் மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. 2,800 துப்புரவு தொழிலாளர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர். இவ்வாறு பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    சக்கர ஸ்நான நிகழ்வில் திரளான பக்தர்கள் புனித நீராடல்: திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு

    October 3, 2025
    ஆன்மீகம்

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் – ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

    October 2, 2025
    ஆன்மீகம்

    அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    October 2, 2025
    ஆன்மீகம்

    குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!

    October 1, 2025
    ஆன்மீகம்

    பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு

    October 1, 2025
    ஆன்மீகம்

    ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவில் 10 இடங்கள் புத்துணர்ச்சியுடன் ஆஃபீட் – இங்கே சுற்றுலா பொறிகள் இல்லை!
    • டெல்லி போலி சாமியாரின் சர்வதேச பாலியல் மோசடி அம்பலம்
    • எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு
    • 90 நாட்களில் 5-10 கிலோவை இழக்க விரும்புகிறீர்களா? தமன்னா பாட்டியாவின் பயிற்சியாளர் செய்ய வேண்டிய 3 விஷயங்களை வெளிப்படுத்துகிறார்; ‘90% நேரம் .. ‘
    • கொல்லப்பட்டதாக கருதிய பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.