
திருமலை: வருடாந்திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திருமலையில் வெகு சிறப்பாக நடந்தது.
இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர்.

