Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’
    ஆன்மீகம்

    ‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் ‘ஈதுல் ஃபித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈது’ என்ற வார்த்தைக்கு ‘பெருநாள்’ என்றும், ‘பித்ர்’ எனும் அரபிச் சொல்லுக்கு ‘நோன்பை விடுதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.

    நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் ‘சதகத்துல் ஃபித்ர்’ எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும்.

    பெருநாள் அன்று அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை முடித்து, நேரத்தோடு குளித்து, புத்தாடையணிந்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவர். தொழுகை முடிந்ததும், ஆனந்தப் பேருவுவகையால் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வர். உறவினர்களின் வீடுக ளுக்குச் செல்வர், மதியம் சிறந்த உணவை சமைத்து உண்பர். வெளிப் படையாக பார்த்தால்,பெருநாள் என்பது அவ்வளவுதான்! ஆனால், அந்தப் பெருநாள் தரும் பாடமும் செய்தியும் மகத்தானவை.

    இஸ்லாமியர்களுக்கு இரண்டே பெருநாள்கள்தான். ஒன்று நோன்புப்பெருநாள்.மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இந்த இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாட்களல்ல. மிக உயர்ந்த லட்சியத்தையும், மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வாண வேடிக்கை, ஆடல், பாடல், கூத்து, கும்மாளம், கேளிக்கை என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே இவை.

    பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இருபெரும் பேருண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றி செலுத்தும் தருணங்களாகவே பெருநாள்கள் கொண்டாடப்படு கின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள் மட்டும்தாம்.

    `அல்லாஹு அக் பர்’ (இறைவன் மிகப்பெரிய வன்) என்று சொல்லி இறைவனைப் புகழும் தக் பீர்தான் பெருநாள் தினத் தின் பெரு முழக்கமாகும். அதனால்தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருணங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ‘உங்க ளின் ஈதுப் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்துங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடு இல்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் முன் அவனும் அடிமையே! `இறைவா… நாங்கள் உன் அடிமைகளே. நீயே மிகப்பெரியவன்!’ என்று உரத்துச் சொல்ல வேண்டும்.

    இப் பெருநாளின்போது நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.

    இதே வழியில், இன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களிலும் ஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல் இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலோங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படுகிறது.

    நமது இந்தியத் திருநாட்டில், இந்த ‘ஈதுல் பித்ர்’ நன்னாளில் இஸ்லாமியர்களை அனைத்து சமயத்தினரும் வாழ்த்துவதும், இஸ்லாமியர் வீடுகளில் விருந்துண்டு மகிழ்வதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் மாபெரும் கருத்தை பறைசாற்றுவதின் ஓர் அங்கமாகும். ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம்.

    – மவ்லானா காஜி மு. சையது மசூது ஜமாலி, தலைமை இமாம் ஜும்ஆ மஸ்ஜித், மயிலாப்பூர்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருமலையில் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம்

    July 6, 2025
    ஆன்மீகம்

    பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் | ஞாயிறு தரிசனம்

    July 6, 2025
    ஆன்மீகம்

    சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

    July 6, 2025
    ஆன்மீகம்

    திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமாரை சித்ரவரை செய்த போலீஸாரிடம் இருந்து ரூ.1 கோடி வசூலித்து இழப்பீடு வழங்க விசிக வலியுறுத்தல்
    • அக்ரூட் பருப்புகள் அல்லது பிஸ்தா? ஊட்டச்சத்து, நன்மைகள் மற்றும் எது ஆரோக்கியமானது – இந்தியாவின் நேரங்கள்
    • பர்மிங்காம் வானிலை: எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி வாய்ப்பை பறிக்குமா மழை?
    • மீண்டும் ஹீரோவானார் சரவணன்!
    • தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.