Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஆர்எஸ்எஸ் – கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத்
    ஆன்மீகம்

    ஆர்எஸ்எஸ் – கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத்

    adminBy adminJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆர்எஸ்எஸ் – கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

    கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூரில் பேரூர் ஆதீனத்தைத் கி.பி.11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பின்னர், அவரின் அருள்வழியில் 24-ஆம் குருமகாசந்நிதானமாக சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றினார்.

    அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது. பேரூர் ஆதீனத்தின் 24–ம் குருமகாசந்நிதானங்கள் உலகெங்கும் விரிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ் நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள்.

    குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்குச் சென்று அவர்களின் இல்லங்களில் திருவிளக்கு வழிபாடுகளை நடத்தியது, பல்வேறு வகையான மக்களுக்கும் தீக்சைகளை வழங்கி அவர்களை ஆதீன கர்த்தர்களாக ஆக்கியது என அடிகளார் பல்வேறு பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவர்கள்.

    இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளாருக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டாக அமைந்துள்ளது. அதை ஒட்டி இருவருக்குமான நூற்றாண்டு விழாவை, பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் 23-ம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

    அன்று காலை 6 மணி முதல் 7:15 மணி வரை வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பாகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளை செய்ய உள்ளார்கள். அதைத்தொடர்ந்து 11 மணி வரை நடைபெறம் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    July 15, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    July 14, 2025
    ஆன்மீகம்

    14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    நவக்கிரக தோஷம் நீக்கும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி

    July 13, 2025
    ஆன்மீகம்

    விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் – 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் – சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர்!
    • வீட்டில் கரப்பான் பூச்சிகளை அகற்ற 5 பயனுள்ள வழிகள்
    • “பான் இந்தியா படமாக இருந்தால் விஜய்யை பிரதமராக காட்டியிருப்பேன்” – ‘யாதும் அறியான்’ இயக்குநர் திட்டவட்டம்!
    • சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு: கம்யூ., மதிமுக கண்டனம்
    • பர்வீன் பாபியின் முன்னாள் காதலன் கபீர் பேடி ‘மனநலத்திற்கு’ உதவி பெறும்படி கேட்டுக்கொண்டார்: இதன் பொருள் என்னவென்றால், மனநலக் கோளாறுகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வகைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.