Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு
    ஆன்மீகம்

    ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா முடிந்து, ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலிப்பர்.

    இரவு 8 மணியளவில் தீபாராதனை முடிந்து தங்க ரிஷப வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் வீதி உலா நடைபெறும். அக்னி தீர்த்தக்கடற்கரையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டிணம் கடற்கரைகளிலும் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்படுவார்கள்.

    சிறப்பு ரயில், பேருந்துகள்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது. இதன்படி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06711) மதுரையில் இருந்து 23.07.2025 புதன்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் 24.07.2025 அதிகாலை 02.30 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும்.

    மறுமார்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06712 ) வியாழக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு மதுரைக்கு வந்தடையும். இந்த ரயில்கள் மதுரை கிழக்கு, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என மதுரைக் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இருமார்க்கத்திலும் சேர்த்து மொத்தம் 200-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, www.tnstc.in மற் றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!

    August 12, 2025
    ஆன்மீகம்

    கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 12, 2025
    ஆன்மீகம்

    பதவி உயர்வு அளிக்கும் சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

    August 10, 2025
    ஆன்மீகம்

    கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 10, 2025
    ஆன்மீகம்

    அமெரிக்காவில் கம்பராமாயண இசை கச்சேரி!

    August 9, 2025
    ஆன்மீகம்

    உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்க வரி விதிப்பால் கரூர் ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு எத்தகையது?
    • செப்டம்பரில் காதல் மாற்றும் இமயமலை மலைவாச நிலையங்கள்; மழை இல்லை ரெயின்போஸ்!
    • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
    • 10 நோய்கள் நாய்கள் ரேபிஸைத் தவிர மனிதர்களுக்கும் பரவக்கூடியவை மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆழமான கடல் பணி: இந்திய அக்வானாட்ஸ் டைவ் பதிவு 5,000 மீட்டர்; கடலுக்கடியில் ஆய்வுக்கான மைல்கல் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.