Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
    ஆன்மீகம்

    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.

    முரு​கப்​பெரு​மானின் முதல்​படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில்கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்டு திருப்​பணி​கள் தொடங்​கப்​பட்​டன. ரூ.2 கோடியே 44 லட்​சம் மதிப்​பில் ராஜகோபுரத்​தில் 7 தங்​கக்​கலசம், கோவர்த்​த​னாம்​பிகை சந்​நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகிய​வற்றை புதுப்​பிக்​கும் பணி​கள் நடை​பெற்​றன. உபய​தா​ரர்​கள் மூல​மும் பல கோடி ரூபாய் செல​வில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பணி​கள் நிறைவடைந்​ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த முடி​வெடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் தொடங்​கின.

    தமிழ் வேதங்​கள் முற்​றோதல்: அதன்​படி, ஜூலை 10-ம் தேதி மாலை வள்ளி தேவசேனா மண்​டபத்​தில் 75 யாக குண்​டங்​கள் அமைத்து 200 வாச்​சா​ரி​யார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க முதல்​கால யாக பூஜை தொடங்​கியது. இரண்​டாம் நாள், மூன்​றாம் நாள், நான்​காம் நாள் என காலை, மாலை யாக பூஜைகள் நடை​பெற்​றன. வேத சிவாகமத்​துடன் பெண் ஓது​வார்​கள் உட்பட 80 ஓது​வார்​கள் பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ் கந்​தர் அனுபூதி ஆகிய செந்​தமிழ் வேதங்​களை முற்​றோதுதல் செய்​தனர்.

    நேற்று முன்​தினம் இரவு 10 மணி​யள​வில் மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லிலிருந்து மீனாட்​சி, சுந்​தரேசுவரர் பரி​வார மூர்த்​தி​களு​டன் புறப்​பட்​டனர். நேற்று அதி​காலை திருப்​பரங்​குன்​றம் வந்த மீனாட்​சி, சுந்​தரேசுவரருக்கு திருப்​பரங்​குன்​றம் 16 கால் மண்​டபத்​தில்வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. நள்​ளிர​விலேயே மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து திரளான பக்​தர்​கள் திருப்​பரங்​குன்​றத்​தில் குவிந்​தனர். சந்​நிதி வீதி, கிரி வீதி, சரவணப்​பொய்கை என திரும்​பிய பக்​கமெல்​லாம் பக்​தர்​கள் வெள்​ள​மாகக் காட்​சி​யளித்​தது.

    ஐந்​தாம் நாள் நிகழ்ச்​சி​யாக கும்​பாபிஷேகத்தை முன்​னிட்டு நேற்று (ஜூலை 14) அதி​காலை 3.45 மணிக்கு எட்​டாம் கால யாகபூஜை நடை​பெற்​றது. அதி​காலை 5 மணி​யள​வில் யாக​சாலை​யில் வைத்து பூஜிக்​கப்​பட்ட கடங்​கள் புறப்​பாடு நடை​பெற்​றது.

    புனித நீர் தெளிப்பு: இந்​துசமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சேகர்​பாபு, வணிக வரித் துறை அமைச்​சர் பி.மூர்த்தி ஆகியோர் ராஜகோபுரத்​தில் ஏறி பச்​சைக்​கொடியை அசைத்​தனர். அதைத் தொடர்ந்து அதி​காலை 5.31 மணி​யள​வில் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரி​வார மூர்த்​தி​கள், கோவர்த்​த​னாம்​பிகை, வல்லப கணபதி ஆகியவிமானங்​களுக்கு புனித நீர் ஊற்றிகும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

    அப்​போது பக்தி பரவசத்​தில் ‘அரோக​ரா… அரோக​ரா’ என விண்​ண​திர பக்​தர்​கள் முழக்​கங்​களை எழுப்​பினர். கும்பாபிஷேகம் முடிந்​தவுடன் 10 ட்ரோன்​கள் மூலம் புனித நீர் பக்​தர்​கள் மீது தெளிக்​கப்​பட்​டது. கும்​பாபிஷேகத்​தில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து​கொண்டு தரிசனம் செய்​தனர். ஆயிரக்​கணக்​கானோருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது.

    3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு: இவ்​விழா​வில் மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, ராஜன்​செல்​லப்பா எம்​எல்ஏ உள்​ளிட்​டோர்பங்​கேற்​றனர். மாநகர காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் தலை​மை​யில் 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டனர்.

    கும்​பாபிஷேக ஏற்​பாடு​களை கோயில் அறங்​காவலர் குழுத் தலை​வர் ப.சத்​யபிரியா தலை​மை​யில் கோயில் துணை ஆணை​யர் சூரிய​நா​ராயணன், அறங்​காவலர்​கள் மணிச்​செல்​வன், சண்​முகசுந்​தரம், பொம்​மதேவன், ராமையா மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்​திருந்​தனர். திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தை முன்னிட்டு ராஜகோபுரத்​தில் உள்ள கலசத்​திற்கு புனித நீர் ஊற்றப்​பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    July 14, 2025
    ஆன்மீகம்

    14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

    July 14, 2025
    ஆன்மீகம்

    நவக்கிரக தோஷம் நீக்கும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி

    July 13, 2025
    ஆன்மீகம்

    விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் – 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

    July 12, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 15 முதல் பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம்

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும்
    • தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தவறவிட எளிதானவை
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு: வருவாய் துறை செயலர் தகவல்
    • அதிர்ச்சியூட்டும்! தனிமையை நீரிழிவு நோயுடன் இணைக்க முடியும்; இங்கே எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டால் பதவிகள் தானாக வரும்: அண்ணாமலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.