Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
    உலகம்

    போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.

    இந்நிலையில் மறுநாளான திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு காலமானார். பெருமூளை பக்கவாதம், கோமா, இதயம் செயலிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்தது.

    இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, நிமோனியா உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் முதல் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் நேற்று வெளியிட்டது. அதில், மறைந்த போப்பாண்டவரின் உடல் சிவப்பு நிற வழிபாட்டு அங்கி அணிவிக்கப்பட்டு தலையில் மிட்ரே என்ற தலைப்பாகை மற்றும் கைகளில் ஜெபமாலையுடன் வைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

    வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தின் தனிப்பட்ட தேவாலயத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தவர். லத்தீன் அமெக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2013 மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவரது பதவிக் காலம் கருணை, பணிவு, சீர்திருத்தம், ஏழைகள் மீதான உலகளாவிய கவனம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டிருந்தது.

    போப் ஆண்டவர் மறையும்போது அவரது உடலை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நல்லடக்கம் செய்வது பாரம்ரிய வழக்கமாகும். ஆனால் போப் பிரான்சிஸ் தனது உடலை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என இறுதி சாசனத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது கல்லறை எளிய முறையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்க உள்ளது.

    இதில் உலகம் முழுவதிலும் இருந்து கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித மேரி பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் அடக்கம் செய்யப்படும் முதல் போப் என்ற பெருமையை பிரான்சிஸ் பெறுவார். போப் பிரான்ஸ்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பிறந்த அர்ஜென்டினாவில் ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று முதல் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதத் தலைவர் ஒருவரின் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுவது அரிய நிகழ்வாகும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டெக்சாஸ் ஏஜி வேட்பாளரின் இந்திய-விரோத இடுகை பின்வாங்குகிறது சமூகக் குறிப்பு அவரது உயர் நன்கொடையாளர்களில் பாகிஸ்தானிய மோசடி செய்பவர் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்’: 8 வயது டெக்சாஸ் சிறுவனின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு கண்ணீர் சிந்தும் வீடியோ வைரலாகும் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘கடவுள் மீதான விரோதத்தின் காரணமாக நான் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறினேன்’: மின்னசோட்டா தேவாலயத்திற்குள் ICE எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை DNI துளசி கப்பார்ட் வெடிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ஆதார் அமெரிக்க எஸ்எஸ்என் விவாதத்தில் நுழைகிறது: தீவிர வலதுசாரி அரசியல் எழுத்தாளர் கர்டிஸ் யர்வின் இந்தியாவுக்கு எதிரான அவதூறுடன் பின்னடைவைத் தூண்டுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    இந்தியாவில் பிறந்த ஆர்ஏஎஸ் தங்கப் பதக்கம் வானியற்பியல் வல்லுநர் மற்றும் நாராயண மூர்த்தியின் மைத்துனர் ஸ்ரீ குல்கர்னி யார்? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 21, 2026
    உலகம்

    புதிய SNL ஸ்கெட்ச்சில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர்ச்சிகள், ஸ்பின்-ஆஃப்கள் மற்றும் எபிசோட் 9 ‘கன்ஃபார்மிட்டி கேட்’ ஆகியவற்றைப் பெறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மகாராணி ஆஃப் பரோடா’ ரதிகராஜே கெய்க்வாட்டின் ராயல் ப்ளஷ்-பிங்க் புடவை அதன் மிகச்சிறந்த அமைதியான ஆடம்பரமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உயிரியல் ரீதியாக தனக்குச் சொந்தமில்லாத குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு பெண் IVF கிளினிக்கைப் பொறுப்பேற்றுள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா விண்வெளி வீரர் சுனி வில்லியம்ஸ் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றார்: அவர் என்ன சம்பாதித்தார், அவரது ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் விளக்கப்பட்டுள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாக எந்த நதி பாய்கிறது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 22 அன்று என்ன நடந்தது: ஆண்டுகளில் மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.